தனித் தமிழ் ஈழத்தை பிரகடனப்படுத்த தயாராகும் புலிகள்: இலங்கை

Subscribe to Oneindia Tamil


கொழும்பு:

சுதந்திர தமிழ் ஈழ நாட்டை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விடுதலைப் புலிகள் பிரகடனப்படுத்த தயாராகி வருவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து இலங்கை அரசின் அரசியல் விவகாரத்துறை செய்தித் தொடர்பாளர் ஜெயராஜ் பெர்னாண்டாபுல்லே கூறுகையில், அடுத்த ஆண்டு ஜனவரி 18ம் தேதி சுதந்திர தமிழ் ஈழ நாட்டை அறிவிக்க விடுதலைப் புலிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதுதொடர்பான தன்னிச்சையான அறிவிப்பை விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் வெளியிடவுள்ளார்.

இது குறித்து எங்களுக்கு உறுதியான தகவல் கிடைத்துள்ளது.

ஆனால் இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எங்களது படைகள் விடுதலைப் புலிகளுக்கு எதிராக கணிசமான வெற்றியைப் பெற்று வருகின்றனர் என்று கூறியுள்ளார்.

இலங்கை அரசின் இந்த தகவல் ஈழப் பிரச்சினையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+