கேரளாவில் அதிகாலையில் லேசான நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
திருச்சூர்
இன்று அதிகாலை கேரளாவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
திருச்சூர், பாலக்காடு மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் பல பகுதிகளில் காலை 4.40 மணியளவில் இந்த நில நடுக்கம் உணரப்பட்டது.
ரிக்டர் அளவுகோளில் 2.1 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
சுமார் 6 வினாடிகள் வரை நீடித்த இந்த நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் தூக்கத்தில் இருந்து எழுந்து வீடுகளை விட்டு ஓடினர். நிலநடுக்கம் நின்றுவிட்ட பின்னரும் அச்சத்தில் தெருக்களிலேயே நெடுநேரம் நேரத்தைக் கழித்தனர்.












Click it and Unblock the Notifications