கும்பகோணம் மகாமகம் குளத்தில் மூழ்கி இருவர் சாவு
கும்பகோணம்:
கும்பகோணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மகாமக குளத்தில் நீராடிய பக்தர்கள் இருவர் நீரில் மூழ்கி இறந்தனர்.
சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் முருகன் 25). ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சாதிக் (30). இருவரும் கும்பகோணம் நாகேஸ்வரன் கீழவீதியில் நடந்துவரும் ஒரு கட்டிட வேலையில் கொத்தனாரா வேலை பார்த்து வருகிறார்கள்.
இவர்கள் இருவரும் நேற்று கும்பகோணத்தில் உள்ள மகாமகம் குளத்தில் குளிக்க சென்றனர். முருகன் குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்று குளித்துள்ளார். குளித்துவிட்டு அவரால் குளத்தின் கரைக்கு திரும்ப முடியாமல் தன்னை காப்பாற்றுமாறு சத்தம் போட்டுள்ளார்.
அப்போது அவருடன் குளிக்க வந்த நண்பர் சாதிக் அவரை காப்பாற்ற முயன்றார். இதில் இருவருக்கும் நீச்சல் தெரியாததால் காப்பாற்றுமாறு குரல் கொடுத்தனர்.
இதைப் பார்த்து குளத்தில் குளித்துக் கொண்டிருந்த மற்ற பக்தர்கள் காவலர்களுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் இருவரும் மூழ்கி விட்டனர்.
பின்னர் இருவரையும் தீயணைப்புப்படை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிறிது நேரத்திலேயே இரண்டு பேரும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துவிட்டனர்.












Click it and Unblock the Notifications