மன வளர்ச்சி குன்றிய பெணணை கற்பழிக்க முயன்ற வாலிபர் கைது!
Subscribe to Oneindia Tamil
திருவாரூர்:
திருவாரூரில் மன வளர்ச்சி குன்றிய பெணணை கற்பழிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம், முதுப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் மேல்கரையை சேர்ந்தவர் சண்முகம். அவரது மகள் கலையரசி (21) மன வளர்ச்சி குன்றியவர். சண்முகத்தின் வீட்டிற்கு அருகில் ராஜேஷ்(25) என்ற இளைஞர் வசித்து வருகிறார்.
கலையரசி வீட்டில் தனியாக இருந்த சமயம் பார்த்து அவரது வீட்டில் புகுந்த ராஜேஷ் கலையரசியை கற்பழிக்க முயன்றுள்ளார். கலையரசியின் அலறல் அந்த பகுதியையே அதிரவைத்தது. இதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஒடி வந்து கலையரசியை காப்பாற்றினர்.
ராஜேஷ் தப்பி ஒடிவிட்டார். இது குறித்து கலையரசி தாய் ஆனந்தவள்ளி முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ராஜேஷை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications