மதுரையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
Subscribe to Oneindia Tamil
மதுரை:
சென்னையில் கடந்த 6ம் தேதி வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கறிஞர்கள் அதற்கு கண்டனம் தெரிவித்து நீதிமன்றத்தை புறக்கணிப்பு செய்தனர்.
கடந்த 6ம் தேதி ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்ற வழக்கறிஞர்களை மீது மருத்துவமனை ஊழியர்கள் தாக்கினர். இது தொடர்பாக இதுவரை மருத்துவமனை ஊழியர்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்தனர்.
இதனால் இன்று உயர் நீதிமன்ற பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications