சிக்கன் கேட்டு கைதி தற்கொலை மிரட்டல்!
புக்கோட்டை:
புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒரு கைதி, மட்டன், சிக்கன், கீரை, நெய் கேட்டு தற்கொலை மிரட்டல் விடுத்ததால் சிறையில் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகரை சேர்ந்தவர் செல்வம். திருட்டு வழக்கு ஒன்றில் கைதான இவர் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் திடீரென சிறைக் கட்டிடத்தின் மீது ஏறி நின்று கொண்டு தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தார்.
இத்தகவல் கேட்டு சிறைக்கு வெளியே சென்று ெகாண்டிருந்த பொதுமக்கள் கூடி நின்றனர். தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் முகேஷ் ஜெயகுமார் அங்கு வந்தார்.
என்ன வேண்டும், எதற்காக இந்தப் போராட்டம் என்று கேட்டார். அதற்கு செல்வம், சிறையில் முறையாக உணவு வழங்குவது இல்லை, உணவில் கீரை, மட்டன், சிக்கன், நெய், போன்றவை வழங்கப்படுவதில்லை என்றார்.
இவை வழங்கப்படாவிட்டால் தற்கொலை செய்து கொள்ேவன் என்று கூறி மிரட்டினார். முதலில் கீழே இறங்கி வா, அனைத்தும் செய்து தரப்படும் என இன்ஸ்பெக்டர் சமாதானமாக பேசினார்.
இதையடுத்து சமாதானமடைந்த செல்வம் கீழே இறங்கி வந்தார். அன் பின்னர் செல்வத்திற்கு பால், பழம் வாங்கிக் ெகாடுத்து சிறை அறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications