நின்ற லாரி மீது வந்த பஸ் மோதி 3 பேர் பலி
மேல்மருவத்தூர்:
காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே சாலை ஓறம் நின்று கொண்டிருந்த பழுதடைந்த லாரி மீது பஸ் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர்.
மதுராந்தகத்திலிருந்து திண்டிவனம் நோக்கி சென்ற லாரி ஒன்று மேல்மருவத்தூர் அருகே டயர் பஞ்சராகி நின்று விட்டது. லாரியின் ஓட்டுநரும், கிளீனரும் டயரை மாற்றிக் கொண்டிருந்தனர்.
அப்போது சென்னையிலிருந்து மதுரை நோக்கி சென்ற அரசு விரைவு பேருந்து நின்று கொண்டிருந்த லாரியின் மீது பலமாக மோதியது. இதில் லாரியின் கிளீனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
லாரி டிரைவர் ஜெயக்குமார் மற்றும் அரசு பேருந்தின் டிரைவர் முருகேசன் ஆகியோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர்.
விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 2 பெண்கள் உட்பட 13 பேர் படுகாயம் அடைந்தனர். அனைவரும் மதுராந்தகம், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications