தனியார் மில் நிர்வாகி வீட்டின் மீது குண்டு வீச்சு
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனியார் மில் நிர்வாகியின் வீட்டின் மீது குண்டு வீச்சு தாக்குதல் நடந்துள்ளது.
சேரன்மகாதேவியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் தனியார் மில் ஒன்றின் நிர்வாகியாக உள்ளார்.
இன்று காலை அடையாளம் தெரியாத சிலர், பாலகிருஷ்ணனின் வீட்டின் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அதிபயங்கர சத்தத்துடன் வெடித்த இந்த குண்டு வீச்சால் அந்த பகுதி முழுவதும் வெகுநேரமாக புகை மண்டலமாக காட்சியளித்தது.
குண்டை வீசியவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த குண்டுவீச்சால் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இது குறித்து சேரன்மகாதேவி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
படுகொலைகளுக்கு பெயர் போன நெல்லை மாவட்டத்தில் தற்போது மீண்டும் வன்முறை தலைதூக்க ஆரம்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications