சாலை மறியல்-விசைத்தறி தொழிலாளர்கள் கைது
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவிலில் சாலை மறியல் போராட்டம் நடத்திய விசைத்தறி தொழிலாளர்கள் 493 பேர் கைது செய்யப்பட்டனர்.
சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு, விடுப்புச் சம்பளம், போனஸ் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், ஊர்வலம் மற்றும் தொடர் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.
நேற்று காலை 11 மணிக்கு சி.ஐ.டி.யூ விசைத்தறி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திருவள்ளுவர் சாலையில் இருந்து ஆயிரக்கனக்கான தொழிலாளர்கள் ஊர்வலமாக சென்று பஸ் நிலையம் முன்பு மூன்று சாலைகள் சந்திக்கும் இடத்தில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
சி.ஐ.டி.யூ மாவட்ட செயலாளர் கருமலையான், செயற்குழு உறுப்பினர் பாஸ்கரன், தாலுகா செயலாளர் முத்துபாண்டியன், நகர செயலாளர் திருவுடையான், விசைத்தறி தொழிலாளர் சங்கதலைவர் நடராஜன், செயலாளர் மாடசாமி, விவசாய சங்க தாலுகா செயலாளர் நல்லசாமி, பிலிப்பு, ஆறுமுகம் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.
ஏராளமான பெண்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 84 பெண்கள் உள்பட 493 விசைத்தறி தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications