போலி பாஸ்போர்ட்: பெண் உள்பட இருவர் கைது
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
சிங்கப்பூரிலிருந்து வந்த பெண்ணையும், ஷார்ஜாவிலிருந்து வந்த இளைஞரையும் போலி பாஸ்போர்ட் வழக்கில் திருச்சி போலீஸார் கைது செய்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் நேற்று ஷார்ஜாவிலிருந்து இந்தியன் விமானம் மூலம் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் குடியுரிமைத்துறை அதிகாரிகள் அவரை பரிசோதித்தபோது அவர் வைத்திருந்தது போலி பாஸ்போர்ட் என்று தெரிய வந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
அவரது உண்மையான பெயர் முருகேசன். ஆனால் இன்னொருவரின் பாஸ்போர்ட்டில் தனது புகைப்படத்தை ஒட்டி அவர் ஷார்ஜாவிலிருந்து திருச்சி வந்துள்ளார்.
இதேபோல சிங்கப்பூரிலிருந்து போலி பாஸ்போர்ட்டில் திருச்சிக்கு வந்த ஆர்த்தி என்ற பெண்ணையும் போலீஸார் கைது செய்தனர்.
இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications