திருப்பதியில் நவராத்தி பிரம்மோற்சவம்-12ம் தேதி ஆரம்பம்
Subscribe to Oneindia Tamil
திருப்பதி:
திருப்பதியில் உள்ள வெங்கடாஜலபதி திருக்கோவிலில் 3 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் நவராத்திரி பிரம்மோற்சவ விழா வரும் 12ம் தேதி வெகு விமரிசையாக துவங்குகிறது.
ஆண்டு தோறும் நடைபெறும் பிரம்மோற்சவம் கடந்த மாதம் நடந்தது. ஆனால் நவராத்திரியை முன்னிட்டு 3 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் பிரம்மோற்சவ விழா வரும் 12ம் தேதி முதல் கொண்டாடப்பட உள்ளது.
இந்த நவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் ஸ்நயன திருமஞ்சனம், தீபஜரோகணம் மற்றும் ரத உற்சவ வைபவம் ஆகியவை நடைபெறும். ரத உற்சவ வைபவத்தில் மாடவீதியில் மட்டும் தங்கத்தேர் உற்சவம் நடைபெறும்.
தசரா விடுமுறையும் இந்த விழாவுக்கு மிக அதிகளவிலான பக்தர்கள் வரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
12ம் தேதி துவங்கும் இந்த விழா 20ம் தேதி நிறைவு பெறும்.












Click it and Unblock the Notifications