For Quick Alerts
For Daily Alerts
Just In
திமுக 'இப்தார்' நிகழ்ச்சியில் அதிமுக பிரமுகர்!
நாகை:
நாகூரில் திமுகவினர் நடத்திய இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அதிமுக பிரமுகர் கலந்து கொண்டார்.
நாகூர் தர்காவில் திமுக சார்பில் நேற்று இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்கு நாகப்பட்டிணம் திமுக எம்பி விஜயன் தலைமை வகித்தார். ஏகேஎஸ் விஜயன் முன்னிலை வகித்தார். திமுக நகரச் செயலாளர் வீராசாமி, நகராட்சி துணைத் தலைவர் மாரிமுத்து , மற்றும் நாகை நகராட்சி கவுன்சிலர்கள் உட்பட ஏராளமான திமுக தொண்டர்களும், முஸ்லீம் மக்களும் இந்த இப்தார் விருந்தில் கலந்து கொண்டனர்.
இந்த இப்தார் விருந்தில் அதிமுகவை சேர்ந்த நாகை நகராட்சி தலைவர் சந்திரகேகரன் கலந்து கொண்டார்.
இது குறித்து அப்பகுதி அதிமுகவினர், தங்கள் தலைமைக்கு புகார் மனு அனுப்பி நாகையில் உள்ள ஒரு எஸ்டிடி பேக்ஸ் மெஷினையே 'பயர்' ஆக வைத்து விட்டனராம்.
Comments
Story first published: Saturday, December 15, 2007, 21:39 [IST]