லைட் எரியாததால் 6 மணி நேரம் தாமதமான சென்னை-பாரிஸ் விமானம்!!

Subscribe to Oneindia Tamil


சென்னை:

விமானத்தின் வால் பகுதியில் லைட் எரியாததால், பாரீஸ் செல்லவேண்டிய விமானம் 6 மணிநேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

சென்னையிலிருந்து நேற்று அதிகாலை 1.30 மணிக்கு பாரீஸ் செல்லவேண்டிய ஏர்-பிரான்ஸ் விமானம் செல்ல தயாராக இருந்தது. விமானத்தில் பயணிகள் அனைவரும் ஏறி அமர்ந்த பின்னர் விமானம் புறப்பட தயாராக இருந்தும் சிக்னல் கிடைக்காததால் தாமதம் ஆனது.

ஆனால் வெகுநேரமாக சிக்னல் கிடைக்காததால் விமானத்தின் பைலட் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு ஏன் சிக்னல் கொடுக்கவில்லை என்று கேட்டார்.

அதற்கு அவர்கள் விமானத்தின் வால்பகுதியில் இருக்கும் லைட் எரியவில்லை. அதனால் சிக்னல் கொடுக்க முடியாது என்று கூறியுள்ளனர்.

உடனே இறங்கி பார்த்த பைலட், விமானப் பொறியாளர்களை அழைத்து சரி செய்ய சொல்லியுள்ளார். அவர்கள் அதை பார்த்த சோதனை செய்ததில், விமானத்தின் லைட் பழுதடைந்துள்ளது தெரியவந்தது.

நள்ளிரவு நேரம் என்பதால் அதனை சரிசெய்தால் தான் விமானம் புறப்படும் என்பதால், அனைத்து பயணிகளும் இறக்கப்பட்டு ஓய்வறையில் தங்கவைக்கப்பட்டனர்.

அதற்குள் விடிந்துவிட்டது. இருப்பினும் விமானத்தின் லைட் சரிசெய்யப்படவில்லை. ஆனால் பகலில் செல்ல இந்த விளக்கு தேவையில்லை என்பதால் கிட்டத்திட்ட 6 மணி நேரம் தாமதத்திற்கு பிறகு, காலை 6.30 மணிக்கு விமானம் பாரீஸ் புறப்பட்டு சென்றது.

விமானத்திலிருந்த 137 பயணிகளும் இதனால் பெரும் அவதிக்குள்ளாகினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+