இந்தோனேஷியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
ஜகார்தா:
இந்தோனேஷியாவில் உள்ள சுமத்ரா தீவு பகுதிகளில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதுவரை சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.
சுமத்ரா நேரப்படி இன்று காலை 7.19 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமத்ராவில் இருந்து 82 கி.மீ. தூரத்தில் கடலுக்கடியில் 20 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்தது.
இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவு கோளில் 6.0 ஆக பதிவாகியுள்ளது.
இதையடுத்து சுமத்ரா தீவில் உள்ள பெங்குலு, படாங் உள்பட பல பகுதிகளிலும் கட்டடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர்.
இதனால் சுமத்ரா தீவு மக்கள் பலரும் சுனாமி வருமோ என்ற பயத்தில் உள்ளனர். ஆனால் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications