சந்திரபாபுவுக்கு செல்லும் இடமெல்லாம் செருப்பு!
ஹைதராபாத்:
தெலுங்கு தேச தலைவரும், முன்னாள் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு செல்லும் இடமெல்லாம் செருப்பு வீச்சும், கல்வீச்சும் நடப்பதால் நாயுடு டென்ஷன் ஆகியுள்ளார். முதல்வர் ராஜசேகர ரெட்டி மீது குற்றம் சாட்டியுள்ளார்.
சந்திரபாபு நாயுடு தற்போது அமலாபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இவருடன் ஏராளமான சொகுசு கார்களில் தெலுங்கு தேசம் கட்சி பிரமுகர்கள் செல்கிறார்கள்.
நேற்று முன்தினம் சந்திரபாபு நாயுடு முளுகு என்ற கிராமத்திற்கு சென்ற போது தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் அவர் மீது செருப்பை வீசினார்கள். அப்போது கார் வேகமாகச் சென்றதால் செருப்பு படாமல் தப்பித்தார் நாயுடு.
நேற்று சாயம்பேட்டை என்ற இடத்தில் சுற்றுப் பயணம் செய்தார். அப்போது மயிலாரம் என்ற இடத்தில் அவரை கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர். 9 ஆண்டுகளாக முதல்வராக இருந்தபோது ஒரு முறை எங்களது பகுதிக்கு நீங்கள் வந்ததில்லை. தேர்தல் வரப் போகிறது என்றவுடன் இப்ேபாது வருகிறீர்களா என்று ஆவேசமாக கேட்டனர்.
அப்ேபாது ஒருவர் நாயுடுவை நோக்கி செருப்பை எடுத்து வீசினார். அது நாயுடு இருந்த வாகனத்தில் வந்து விழுந்தது. இதைப் பார்த்து நாயுடு பெரும் அப்செட் ஆனார்.
பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஆந்திராவில் சட்டம், ஒழுங்கு கெட்டு விட்டது. ஒரு முன்னாள் முதலமைச்சருக்கே பாதுகாப்பு இல்லை. அப்படியானால் பாமர மக்களுக்கு எப்படி பாதுகாப்பு அளிப்பார்கள்.
எனது ஆட்சியின் போது ராஜகேசரரெட்டி 1600 கி.மீ. தூரம் பாத யாத்திரை சென்றார். அப்போது அவருக்கு நான் உரிய பாதுகாப்பு கொடுத்தேன். ஆனால் தற்போது நான் செல்லும் இடமெல்லாம் கல், செருப்புகள் வீசப்படுகின்றன. போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அடுத்து நான் ஆட்சிக்கு வந்தால், அராஜகத்திற்கு துணை போகும் போலீஸ் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன் என்றார் நாயுடு.
நாயுடு செல்லும் இடமெல்லாம் செருப்பு வீச்சு நடந்து வருவது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications