கிரிக்கெட் வீரர் கம்பீர் வீட்டில் வருமான வரி ரெய்டு
டெல்லி:
டெல்லியில் உள்ள கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கெளதம் கம்பீர். டெல்லியைச் சேர்ந்த இவரது குடும்பத்தினர் ஜவுளி வியாபாரம் செய்து வருகின்றனர்.
கம்பீரின் குடும்பத்தினர் வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்து சேர்த்ததாக வருமான வரித்துறைக்குப் புகார்கள் வந்தன.
இதையடுத்து நேற்று இரவு டெல்லியில் உள்ள கம்பீரின் வீடுகள் உள்ளிட்ட 6 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். சோதனை நடந்தபோது கம்பீர் வீட்டில் இருந்தார்.
இந்த சோதனையின்போது கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துப் பத்திரங்கள் சிக்கியதாக தெரிகிறது.
இந்த சோதனை குறித்து கம்பீர் கூறுகையில், எனது குடும்பத்தில் பிரச்சினை எழுந்துள்ளது. இப்போதைக்கு வேறு ஒன்றும் கூற விரும்பவில்லை என்றார்.
கிரிக்கெட் வட்டாரத்தில் இந்த ரெய்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications