சிறுபான்மையினர் இட ஒதுக்கீடு மசோதா

Subscribe to Oneindia Tamil


சென்னை:

முஸ்லிம்கள் மற்றும் கிருஸ்தவர்களுக்கு கல்வி-வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழஙகுவது தொடர்பான சட்ட மசோதா வரும் சட்டமன்ற குளிக்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் ஆவுடையப்பன் கூறினார்.

நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

சட்டசபையின் குளிர்கால கூட்டத் தொடர் 17ம் தேதி காலை தொடங்கும். மறைந்த முன்னாள் எம்.எல்.ஏக்கள் பூங்காநகர் நல்லதம்பி , அரவாக்குறிச்சி சதாசிவம், சங்கராபுரம் முத்துசாமி, திருப்பத்தூர் சிவராமன், பவானி நல்லசாமி, மைலாப்பூர் ராம ஜெயம் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்படும்.

இதைத் தொடர்ந்து கூட்டுறவு சங்க அலுவலர் நியமன திருத்த மசோதா, முஸ்லிம்கள் மற்றும் கிருஸ்தவர்களுக்கு கல்வி-வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா, தமிழ்நாடு நகராட்சி சட்ட திருத்த மசோதா உள்பட 5 சட்டத் திருத்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும்.

இதைத் தொடர்ந்து அலுவல் ஆய்வு கூட்டம் கூடி சட்டமன்றத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும். இது குளிர்கால கூட்டத் தொடர் என்பதால் குறைந்த நாட்கள்தான் நடைபெறும் என்றார்.

அரசு கேபிள் நிறுவனம் பற்றிய மசோதா தாக்கல் செய்யப்படுமா என்று கேட்டபோது அதுபற்றி இதுவரை எந்த தகவலும் வரவில்லை என்றார்.

மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான உரிமை மீறல் பிரச்சனை ஆய்வில் உள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+