கைதியை கடத்தி கொலை!
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம்:
கும்பகோணத்தில் கைதியை கடத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
கும்கோணம் ஆண்டலாம் பேட்டையை சேர்ந்தவர் சுதாகர். இவரை ஒரு கொலை வழக்கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறையிலிருந்து சுதாகர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். கும்பகோணம் நீதிமன்றத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்தார்.
கடந்த 21 ம் தேதி நீதிமன்றத்திற்கு கையெழுத்திட சென்ற சுதாகர் இரவு நெடு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது தந்தை தியாகராஜன் தனது மகனை காணவில்லை என கும்பகோணம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் சுதாகரின் நண்பர்கள் சுகுமார், மற்றும் ராஜா ஆகியோரை விசாரித்த போது அவர்கள் சுதாகரை கொலை செய்ததை ஒத்துக்கொண்டனர். அதன் பேரில் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications