தைவானில் பயங்கர பூகம்பம்
Subscribe to Oneindia Tamil
தைபே:
தைவான் நாட்டின் வடகிழக்குப் பகுதியில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரம் தெரியவில்லை.
கிழக்குக் கடற்கரையில் உள்ள இலான் நகரிலிருந்து 7 கிலோமீட்டர் கிழக்கில், கடலுக்கு அடியில் 79 கிலோமீட்டர் ஆழத்தில் பூகம்பத்தின் மையம் இருந்தது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.05 மணிக்கு பூகம்பம் ஏற்பட்டது.
பசிபிக் கடல் பகுதியில் அமைந்திருக்கும் தைவானில் பூகம்பம் ஏற்படுவது சகஜமானது. இன்றைய பூகம்பத்தால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
1999ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் 2400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்தன என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications