'சாலை விபத்தான' கொலை-சிக்கலில் சென்னை போலீஸ்
சென்னை:
சென்னையில் ரவுடிக் கும்பலால் கொல்லப்பட்ட வாலிபர் வழக்கை சாலை விபத்து என போலீஸார் மாற்றியதைக் கண்டித்து ஆயிரக்கணக்கானோர் சாலை மறியல் போராட்டத்தில் குதித்ததால் துறைமுகப் பகுதியில் போக்குவரத்து பல மணி நேரம் பாதித்தது.
சென்னை துறைமுகம் பகுதியில் நேற்று முன்தினம் திணேஷ் என்ற வாலிபர் ஒரு கும்பலால் வெட்டித் தள்ளப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று இரவு உயிரிழந்தார்.
ஆனால் இந்த வழக்கை சாலை விபத்து என போலீஸார் மாற்றியதாக கூறி ஆயிரக்கணக்கான பேர் இன்று காலை 8 மணிக்கு துறைமுகம் ராஜாஜி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் குதித்தனர். இதனால் துறைமுகம் பகுதியில் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நூற்றுக்கணக்கான வாகனங்கள் சாலையின் இரு திசையிலும் ஸ்தம்பித்து நின்றன. திணேஷ் சாவை கொலை வழக்காகப் பதிவு செய்ய வேண்டும், குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும். அதுவரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று பொதுமக்கள் கூறியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிமுக எம்.எல்.ஏ. சேகர்பாபு கூட்டத்தினரை சமாதானப்படுத்தினார். ஆனால் அவர்கள் கேட்காமல் தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications