For Daily Alerts
Just In
லஞ்சம் வாங்கி சிக்கிய பெண் எஸ்ஐ!
திருவள்ளூர்:
தேசிய நெடுஞ்சாலையில் போகும் வாகனங்களை நிறுத்தி லஞ்சம் வாங்கியது தொடர்பாக பெண் எஸ்ஐ உட்பட 6 போலீசார் இன்று இடமாற்றம் செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் அலமேலு. இவரும், ஐந்து போலீசாரும் திருவள்ளூர்-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஆவணங்கள் சரியாக இருந்தும் கூட, 6 பேரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி மிரட்டி லஞ்சம் வாங்கியுள்ளனர்.
இது தொடர்பாக வந்த புகாரையடுத்து, பெண் எஸ்ஐ அலமேலு உட்பட 6 பேரை ஆயுதப்படை போலீஸ் பிரிவுக்கு மாற்றம் செய்து திருவள்ளூர் மாவட்ட எஸ்பி செந்தாமரைக்கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
Story first published: Saturday, December 15, 2007, 21:34 [IST]