For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாணவியை 2வது திருமணம் செய்ய முயன்ற ஆசிரியர்

By Staff
Google Oneindia Tamil News


சேலம்:

சேலம் கல்லூரி மாணவியை காதலித்து ஏமாற்றி 2வது திருமணம் செய்ய முயன்ற பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடியைச் சேர்ந்த கண்ணன் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜமீலா, இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

கண்ணனுக்கு பூர்ணிமா என்ற சேலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி சேட்டிங் மூலம் அறிமுகமாகியுள்ளார். அவரிடம் தனது திருமணத்தை மறைத்த கண்ணன் அவரை காதலிப்பதாகக் கூறியுள்ளார்.

இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர். இதை பூர்ணிமாவின் பெற்றோரும் ஏற்றுக் கொள்ளவே திருமண ஏற்பாடுகளுக்காக சேலம் வந்துள்ளார்.

சந்தேகம் கொண்ட மனைவி ஜமீலா, பூர்ணிமாவின் விலாசத்தை அறிந்து அங்கு நேரில் சென்று கண்ணனுக்கு தன்னுடன் ஏற்கனவே திருமணமானதையும், 2 குழந்தைகள் இருப்பதையும் கூறியுள்ளார்.

அதிர்ச்சியடைந்த பூர்ணிமாவின் பெற்றோர் கண்ணன் மீது போலீசில் புகார் கொடுத்தனர். இதையடுத்து கண்ணனை சேலத்தில் உள்ள ஒரு லாட்ஜில் வைத்து கைது செய்து போலீசார் அவர் மீது பெண் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X