தேவர் நூற்றாண்டு விழா-பசும்பொன் செல்கிறார் கருணாநிதி
பரமக்குடி:
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நூற்றாண்டு விழாவையொட்டி வரும் 30ம் தேதி அவரது நினைவிடத்தில் முதல்வர் கருணாநிதி அஞ்சலி செலுத்தவுள்ளார்.
இது குறித்து குடிசைமாற்று வாரியத்துறை அமைச்சர் சுப. தங்கவேலன் பரமக்குடியில் நிருபர்களிடம் பேசுகையில்,
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்க தேவரின் நூற்றாண்டு விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்து கொள்கிறார். காலை 10 மணிக்கு தேவர் நினைவிடத்தில் அவர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்.
பின்னர் மதுரை செல்லும் அவர் 31ம் தேதி மாரியம்மன் தெப்பக்குளம் அருகே நிறுவப்பட்டுள்ள மருதுபாண்டி சகோதரர்கள் சிலையை திறந்து வைக்கிறார்.
தேவர் நூற்றாண்டு விழாவையொட்டி பசும்பொன்னில் பல லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிப்புப் பணிகளை அரசு மேற்கொண்டுள்ளது. தேவர் வாழ்ந்த வீடு பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
நினைவிடத்தின் அருகே அணையா விளக்கு, முடி காணிக்கை செலுத்துமிடம், புகைப்பட கண்காட்சிக் கூடம், முளைப்பாரி, பால்குடம் அறை, நூலகம் போன்றவையும் கட்டப்பட்டு வருகின்றன.
அங்கு வசிக்கும் தலித் மக்களுக்கும் புதிதாக 75 வீடுகள் கட்டப்படுகின்றன.மேலும் நூற்றாண்டு தோரண வாயிலும் அமைக்கப்பட்டு வருகிறது என்றார்.












Click it and Unblock the Notifications