அல்கோர், இந்தியர் தலைமையிலான ஐ.நா அமைப்புக்கு நோபல்
ஓஸ்லோ:
இந்த ஆண்டுக்கான உலக அமைதிக்கான நோபல் பரிசு முன்னாள் அமெரிக்க துணை அதிபர் அல் கோருக்கும், ஐ.நா. சபையின் பருவ நிலை மாற்றம் தொடர்பான அரசுகளுக்கிடை குழுவுக்கும் (Intergovernmental Panel on Climate Change-ஐபிசிசி) வழங்கப்படவுள்ளது.
இந்தக் குழுவின் தலைவராக இந்தியரான டாக்டர் ராஜேந்திர குமார் பச்செளரி இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மாறி வரும் வானிலை, சுற்றுச்சூழல் அதன் பாதிப்புகள், அதைத் தடுப்பது ஆகியவை குறித்து அல்கோ
ரும் பச்செளரி தலைமையிலான ஐ.நா. அமைப்பும் மேற்கொண்டு வரும் முயற்சிகளைப் பாராட்டி இந்த விருது வழங்கப்படுகிறது.
உலகின் முன்னணி சுற்றுச்சூழலியல் அரசியல்வாதி என அல்-கோரை நோபல் பரிசு கமிட்டி பாராட்டியுள்ளது.
டாக்டர் பச்செளரி பொருளாதாரத்திலும் தொழில்துறை என்ஜினியரிங்கிலும் இரு டாக்டர் பட்டங்களைப் பெற்ற விஞ்ஞானி என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் டாடா எனர்ஜி ரிசர்ச் மையத்தின் தலைவராகவும் இருந்தவர்.












Click it and Unblock the Notifications