காய்ச்சல் பரவலைத் தடுக்காத அதிகாரிகள் சஸ்பெண்ட்
மதுரை:
மதுரை திருமங்கலத்தில் வைரஸ் காய்ச்சலுக்கு 2 சிறுமிகள் பலியானதைத் தொடர்ந்து அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை திருமங்கலம் அருகே உள்ள ஒ.ஆலங்குளம் கிராமத்தில் மர்மக் காய்ச்சல் பரவியது. இந்தக் காய்ச்சலுக்கு 2 சிறுமிகள் உயிரிழந்தனர்.
சாதாரண வைரஸ் காய்ச்சல் என்ற போதிலும் இதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், கிராம மக்கள் காய்ச்சலுக்கு தாங்களே வைத்தியம் பார்த்துக் கொண்டதால், காய்ச்சல் அக்கம் பக்கத்து கிராமங்களுக்கும் பரவியது.
தற்போது அங்கு மருத்துவக் குழுக்கள் முகாமிட்டு தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில், காய்ச்சல் பரவாமல் தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்காத கிராம நிர்வாக அலுவலர் யாகூப் அலி, சுகாதார மேற்பார்வையாளர் சந்திர சேகர் ஆகியோரை சுகாதார துணை இயக்குனர் டாக்டர் பழனிச்சாமி சஸ்பெண்ட் செய்து உத்திரவிட்டார்.












Click it and Unblock the Notifications