விடுதலைப் புலிகள் தாக்குதலில் 5 வீரர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கையின் கிழக்கில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணு வீரர்கள் கொல்லப்பட்டனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள குருநகர் பாசையூர் கடலோரப் பகுதியில் இலங்கை கடற்படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திடீர் தாக்குதலில் புலிகள் ஈடுபட்டனர். விடுதலைப்புலிகள் கடற்படையினர் வந்த படகுகளின் மீது அதிரடியாக பீரங்கி தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலை சற்றும் எதிர்பார்க்காத கடற்படையினர் உயிருக்கு பயந்து ஓடினர். இந்தத் தாக்குதலில் கடற்படை படகு சேதமடைந்து கடலில் மூழ்கடிக்கப்பட்டது. 5 வீரர்கள் பலியானார்கள்.












Click it and Unblock the Notifications