ஏட்டுக்கு அடி - பணம், போன் பறிப்பு
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சியில் போலீஸ் ஏட்டுக்கு அடித்து, உதைத்து, அவரிடம் இருந்த பணம், செல் போன் போன்றவற்றை சிலர் திருடிச் சென்றனர்.
திருச்சி எடமலைபட்டி புதூர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் கந்தசாமி. இவர் பணி முடிந்து வீட்டிற்கு செல்லும் போது கே.கே. நகர் அருகில் மிலிட்டரி மைதானத்திற்கு முன்பு நின்ற 3 பேர் கொண்ட கும்பல் தடுத்து நிறுத்தியுள்ளது.
ஏட்டு கந்தசாமியை இரும்பு கம்பியால் அடித்து உதைத்துள்ளனர். இதனால் ஏட்டு அதே இடத்தில் பரிதாபமாக கீழே சரிந்து விழுந்தார். பின்னர் அவரிடம் இருந்க பணம், செல்போன் போன்றவற்றை அக்கும்பல் கொள்ளையடித்துச் சென்றது.
ரத்தக் காயத்துடன் ஏட்டு சாலையில் கிடந்ததைப் பார்த்த சிலர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications