போலி பாஸ்போர்ட்: வாலிபர் கைது
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
போலி பாஸ்போர்ட் மூலம் சிங்கப்பூர் செல்ல முயன்ற நபரை திருச்சி போலீஸார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவர் சிங்கப்பூர் செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்தார். அவரது பாஸ்போர்ட்டை குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அது போலியானது என்று தெரிய வந்தது.
பால்ராஜும் தனது குற்றத்தை ஒத்துக் கொண்டார். இதையடுத்து போலீஸாரிடம் பால்ராஜ் ஒப்படைக்கப்பட்டார். போலீஸார் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications