ராகிங்: 3 மருத்துவ மாணவர்கள் சஸ்பெண்ட்

Subscribe to Oneindia Tamil


திருச்சி

திருச்சி டாக்டர் கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் ஜூனியர் மாணவர்களிடம் ராகிங் செய்த 3வது ஆண்டு மாணவர்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றுபவரின் மகன் அரசு மருத்துக் கல்லூரியில் முதலாமாண்டு சேர்ந்துள்ளார். அவரை விடுதியில் தங்கிப் படிக்கும் 3வது ஆண்டு மாணவர்கள் சில நாட்களுக்கு முன்பு ராகிங் செய்துள்ளனர்.

இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் பேராசிரியர் புகார் கொடுத்தார். இதையடுத்து கல்லூரி நிர்வாகம் தனிக் குழு அமைத்து விசாரணை நடத்தியது. இதன் அடிப்படையில் சென்னையில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநரகத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டது.

இந்த அறிக்கையைப் பரிசீலித்த மருத்துக் கல்வி இயக்குநரகம், தவறு செய்த 3 மாணவர்ளை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து 3 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். விடுதியையும் அவர்கள் காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

ராகிங் கொடுமைக்கு ஆளான மாணவர் மற்றும் ராகிங் செய்த மாணவர்கள் குறித்த விவரத்தை கல்லூரி நிர்வாகம் வெளியிடவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+