பெண் கற்பழிப்பு - வாலிபருக்கு சிறை
கோவில்பட்டி:
நெல்லை மாவட்டம் புளியம்பட்டி அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணைக் கற்பழித்த வாலிபருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்தப்பட்டது.
புளியம்பட்டி அருகேயுள்ள காசிலிங்கபுரத்தை சேர்ந்தவர் வேலு. இவரது மகள் காந்திமதி. ஆடு மேய்த்து வந்தார். வடக்கு காரசேரியை சேர்ந்த பெருமாள் மகன் நம்பி. இவர் மாடு மேய்த்து வந்தார்.
கடந்த 10.6.2007 அன்று காசிலிங்கபுரத்தில் இருந்து 1 கிமீ தூரத்தில் உள்ள காட்டு பகுதியில் காந்திமதி ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நம்பி, காந்திமதியை பலாத்காரம் செய்தார்.
இதுகுறித்து காந்திமதி புளியம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி நம்பியை கைது செய்து கோவில்பட்டி சப்-கோர்ட்டில் ஆஜர்படுத்தி வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சுளா இளம்பெண் காந்திமதியை பலாத்காரம் செய்த நம்பிக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.












Click it and Unblock the Notifications