விஷக்காய்ச்சல் - 50 பேர் பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
கடலூரில் விஷக் காய்ச்சலுக்கு 50 பேர் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர், சிப்காட் தொழிற்பேட்டை அருகே உள்ளது குடிகாடு காலனி. இங்கு விஷக் காய்ச்சல் பரவியுள்ளது. இதனால் இப் பகுதியைச் சேர்ந்த 30 பேர் கடலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் மேலும் 20 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அரசு மருத்துவமனை மட்டுமல்லாது, தனியார் மருத்துவமனைகளிலும் தொடர்ந்து சிகிச்சை பெற்றவாறு உள்ளனர்.
விஷக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தலை வலி, உடல் வலி, நடக்க முடியாமல் அவதிப்படுவதாக கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications