எஸ்பி வீட்டில் பெண்ணிடம் பலாத்காரம்-காவலர் சஸ்பெண்ட்
விழுப்புரம்:
விழுப்புரத்தில் கூடுதல் எஸ்பி வீட்டில், வீட்டு வேலை பார்த்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரைச் சேர்ந்த ராஜேஸ்வரி விழுப்புரம் ஆயுதப்படை குடியிருப்பில் வசிக்கும் கூடுதல் எஸ்பி வெண்மதி வீட்டில் வேலை பார்த்து வருகிறார்.
அதே குடியிருப்பில் டி.எஸ்.பி முரளியின் வீடும் உள்ளது. அவரிடம் டிரைவராக வேலை பார்க்கும் ஆயுதப்படைப் பிரிவைச் சேர்ந்த முருகையன் பல மாதங்களாக ராஜேஸ்வரியை கேலி செய்து வந்துள்ளார். மேலும் ராஜேஸ்வரியிடம் தவறாக நடக்கவும் முயற்சி செய்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 8ம் தேதி இரவு தனியே இருந்த ராஜேஸ்வரியை, முருகையன் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக ராஜேஸ்வரி விழுப்புரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததையடுத்து, போலீசார் முருகையனை கைது செய்தனர்.
பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற முருகையனை விழுப்புரம் எஸ்.பி அமல்ராஜ் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications