For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குண்டுவெடிப்பு: 9 பேருக்கு தண்டனை

By Staff
Google Oneindia Tamil News


கோவை:

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் 9 பேருக்கு இன்று தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது.

கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் மொத்தம் 158 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். மதானி உள்ளிட்ட 8 பேர் விடுவிக்கப்பட்டனர்.

குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களில் சாதாரண குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டு வருகிறது. இன்று 12 பேருக்கு தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என நீதிபதி உத்திராபதி தெரிவித்திருந்தார்.

இருப்பினும் 9 பேருக்கு மட்டும் இன்று தண்டனை அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கு 5 ஆண்டு முதல் 9 ஆண்டுகள் வரை தண்டனை அளிக்கப்பட்டது.

மற்ற 3 பேருக்கும் வருகிற 18ம் தேதி தண்டனை விவரம் வெளியிடப்படும் என நீதிபதி அறிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X