For Daily Alerts
Just In
குண்டுவெடிப்பு: 9 பேருக்கு தண்டனை
கோவை:
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் 9 பேருக்கு இன்று தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது.
கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் மொத்தம் 158 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். மதானி உள்ளிட்ட 8 பேர் விடுவிக்கப்பட்டனர்.
குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களில் சாதாரண குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டு வருகிறது. இன்று 12 பேருக்கு தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என நீதிபதி உத்திராபதி தெரிவித்திருந்தார்.
இருப்பினும் 9 பேருக்கு மட்டும் இன்று தண்டனை அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கு 5 ஆண்டு முதல் 9 ஆண்டுகள் வரை தண்டனை அளிக்கப்பட்டது.
மற்ற 3 பேருக்கும் வருகிற 18ம் தேதி தண்டனை விவரம் வெளியிடப்படும் என நீதிபதி அறிவித்தார்.
Comments
Story first published: Saturday, December 15, 2007, 21:30 [IST]