For Daily Alerts
Just In
2 சாலை விபத்துகளில் 6 பேர் பலி
பழனி:
பழனி மற்றும் புதுக்கோட்டை அருகே நிகழ்ந்த இரு வேறு சாலை விபத்துக்களில் 6 பேர் உயிரிழந்தனர்.
கேரள மாநிலம், எர்ணாகுளத்தை சேர்ந்த சிலர் காரில் பழனி வழியாக நாகூர் சென்று கொண்டிருந்தனர். அப்போது பழனி அருகேயுள்ள சுக்கமநாயக்கன்பட்டி அருகே சென்றபோது எதிரில் வந்த தனியார் பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியது. இதில் காரில் பயணித்த 4 பேர் உயிரிழந்தனர். பேருந்தில் இருந்த பயணிகள் சிலர் காயமடைந்தனர்.
புதுக்கோட்டை விபத்தில் 2 பேர் பலி:
புதுக்கோட்டை அருகே திருமயத்தில் இன்று காலை தமிழக அரசு பேருந்தும், மதுரையிலிருந்து தஞ்சாவூர் சென்ற தனியார் லாரியும் நேருக்கு நேராக மோதிக் கொண்டன. இந்த விபத்தில் வேனில் இருந்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
Comments
Story first published: Saturday, December 15, 2007, 21:30 [IST]