கிராமப் பகுதிகளில் செக்ஸ் டார்ச்சர்-நர்சுகள் புகார்
திருநெல்வேலி:
கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் செக்ஸ் தொல்லைக்கு ஆளாகி வருவதாக கிராம சுகாதார செவிலியர்கள் மாநாட்டில் குற்றம் சாட்டப்பட்டது.
தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர்கள் சங்க மாவட்ட மாநாடு திருநெல்வேலியில் நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் எலிசபெத் ராணி தலைமை தாங்கினார்.
மாநாட்டில், கிராமங்களில் பணிபுரியும் செவிலியர்களுக்கு உடன் பணிபுரிபவர்களால் பாலியல் ரீதியான தொந்தரவுகள் ஏற்படுகின்றன. அதனை தடுக்க வேண்டும்.
அரசு மருத்துவர்கள் போதிய அளவு செவிலியர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை. இதனால் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், செவிலியர்களை தரக்குறைவாக பேசியதாக, நாமக்கல் மாவட்ட சுகாதாரதுறை இணை இயக்குனர் பழனிச்சாமிக்கு மாநாட்டில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications