For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நகை கடைகளில் மோசடி செய்த வாலிபர் கைது

By Staff
Google Oneindia Tamil News


புளியங்குடி:

நெல்லை மாவட்டம் புளியங்குடியில் உள்ள நகைக் கடையில் ரூ.2.5 லட்சம் ரூபாய் மோசடி செய் வடநாட்டு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம், சாங்க்லி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணா சேட். கடந்த 5 வருடங்களாக புளியங்குடியில் குடும்பத்துடன் வசித்த வரும் இவர் இவர் அப்பகுதியில் தனியாக கடை வைத்து நடத்தி வந்துள்ளார்.

இவர் புளியங்குடியில் உள்ள பிரபல நகைக்கடை உரிமையாளர்களை அதிக அளவில் பழக்கம் ஏற்படுத்தி கொண்டார். பல ஆண்டுகளாக பழகியதால் நகைக்கடை உரிமையாளர்கள் அனைவரும் கிருஷ்ணா சேட் மீது அபார நம்பிக்கை வைத்திருந்தனர்.

கிருஷ்ணா, நகைக் கடைகளில் இருந்து முன்பணம் எதுவும் செலுத்தாமலே நகைகளை பெற்று விற்பனை செய்து வந்துள்ளார். விற்ற பணத்தில் நகைக்கடை உரிமையாளர்களுக்கு கமிஷன் போக மீதிப் பணம் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

கடந்த மாதம் புளியங்குடி காந்தி பஜாரில் உள்ள நகைக்கடை அதிபர்களான முருகேசனிடம் 52 கிராம் எடையுள்ள 2 செயின்கள், பழனியிடம் 56 கிராம் எடையுள்ள 3 நெக்லஸ், கந்தசாமியிடம் 25 கிராம் எடையுள்ள 6 மோதிரங்கள் மற்றும் புதுமனை தெருவைச் சேர்ந்த மீரா ஷாவிடம் நகைகள் வாங்கி தருவதாக கூறி ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் வாங்கியிருந்தார். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.2.43 லட்சம் ஆகும்.

கடந்த 24ம் தேதி முதல் கிருஷ்ணா சேட்டை காணவில்லை. இதனால் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புளியங்குடி போலீசில் புகார் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் கருடகோன் ஆகியோர் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் புளியங்குடியில் ஒரு தனியார் லாட்ஜில் கிருஷ்ணாசேட் தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று அங்கிருந்த கிருஷ்ணா சேட்டை கைது செய்தனர். அவரிடம் இருந்து 133 கிராம் நகைகள் மற்றும் ரூ.70 ஆயிரத்தை கைப்பற்றினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X