For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெண்ணிடம் நகை, பணம் மோசடி செய்தவர் கைது!

By Staff
Google Oneindia Tamil News


மதுரை:

மதுரையில் பெண்ணிடம் வேலை வாங்கித் தருவதாக சொல்லி பணம் மற்றும் நகை மோசடி செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரை மூன்றுமாவடி பகுதியைச் சேர்ந்தவர் கற்பகம். இவர் லேப் டெக்னீசியன் கோர்ஸ் படித்துள்ள இவருக்கு மேலூரைச் சேர்ந்த கேசவன் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது.

கற்பகத்திற்கு வேலை வாங்கித் தருவதாக கூறி அவரிடம் நகை, பணத்தை பெற்றுள்ளார் கேசவன். இதே போல சர்வேயர் காலனியில் ஒரு பெண்ணிடமும் கேசவன் பணம் பெற்றுள்ளார்.

ஆனால், யாருக்கும் வேலை வாங்கித் தந்ததில்லை. இதையடுத்து கேசவன் மீது கற்பகம் போலீஸில் புகார் தெரித்தார். அதன்பேரில் போலீசார் கேசவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X