தர்மபுரி அரசு மருத்துமனை கட்டடம் இடிந்து 15 பேர் காயம்

Subscribe to Oneindia Tamil


தர்மபுரி:

தர்மபுரி அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மகப் பேறு பிரிவு கட்டடம் இடிந்து விழுந்ததில் 15 பேர் படுகாயமடைந்தனர்.

தர்மபுரி அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக ஒரு கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. மகப் பேறு பிரிவுக்கான படுக்கைகளுடன் கூடிய கட்டடம் இது.

இந்தக் கட்டடத்தின் 2வது தளம் இன்று பிற்பகல் 12 மணியளவில் திடீரென பலத்த சப்தத்துடன் இடிந்து விழுந்தது. அப்போது முதல் தளத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பணியில் இருந்தனர்.

கட்டட இடிபாடுகளில் அவர்கள் சிக்கிக் கொண்டனர். தீயணைப்புப் படையினருக்குத் தகவல் சென்று அவர்கள் விரைந்து வந்து தொழிலாளர்களை மீட்டனர். 15 பேர் படுகாயமடைந்தனர். அனைவரும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+