மதுரையில் கருணாநிதி உருவ பொம்மை எரிப்பு !
மதுரை:
மதுரையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் முதல்வர் கருணாநிதியின் உருவ பொம்மையை எரித்தனர்.
சென்னை பிரசிடென்ட்சி கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து தமிழகத்தில் சில கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மதுரையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்பாட்டம் செய்ய முயன்றனர். ஆனால் இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து மாணவர்கள் நீதிமன்றம் முன் ஆர்பாட்டம் செய்ய சென்றனர்.
ஆனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு இருந்ததால் அவர்களால் ஆர்பாட்டம் செய்ய முடியவில்லை. இந் நிலையில் மாணவர்கள் தெப்பக்குளம் தியாகராஜா கல்லூரி அருகே சென்று திடீரென முதல்வர் கருணாநிதியின் உருவ பொம்மையை எரித்தனர்.
இத்தகவல் கேட்டு அங்கு திமுகவினர் குவிந்தனர். இதையடுத்து உருவ பொம்மையை எரித்த மாணவர்கள் ஓடிவிட்டனர்.
அசம்பாவிதம் ஏற்பட்டுவிடுமோ என அஞ்சிய போலீசார் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications