கோவில் திருப்பணிகளுக்கு அரசு மானியம் ரூ. 3 கோடியாகிறது
சென்னை:
கோவில் திருப்பணிகளுக்கு வழங்கப்படும் அரசு மானியத் தொகையை ரூ.75 லட்சத்தில் இருந்து ரூ. 3 கோடியாக உயர்த்தி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்து அறநிலையத் துறையின் உயர்மட்டக் கூட்டம் கோட்டையில் நடந்தது. முதல்வர் கருணாநிதி, அறநிலையத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், குன்றக்குடி ஆதீனகர்த்தா பொன்னம்பல அடிகளார், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார்,
மற்றும் தருமபுரம், திருவாவடுதுறை, திருப்பனந்தாள் ஆகிய ஆதீனங்களின் பிரதிநிதிகள், ஸ்ரீரங்கம் ஆண்டவன் சுவாமிகளின் பிரதிநிதி ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
இதில் கோவில்களில் நடைபெறும் திருப்பணிகளுக்கு வழங்கப்படும் அரசு மானியத் தொகையை ரூ.75 லட்சத்தில் இருந்து ரூ. கோடியாக உயர்த்துவது என முடிவெடுக்கப்பட்டது.
கோவில்களுக்குச் சொந்தமான காலியாக உள்ள நிலங்கள், மனைகளை கோவில்களுக்கு நிரந்தர வருவாய் தரும் வகையில் பயன்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும் கோவில் நிலங்கள் மற்றும் மனைகள் தொடர்பான வழக்குகளை விரைவுபடுத்துவது, கோவில்களுக்குச் சொந்தமான இடங்களில் குடியிருப்போருக்கு நியாயமான வாடகை மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்யப்படும் வாடகை உயர்வு ஆகியவற்றை சீரமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
கோவிலுக்குச் சொந்தமான வயது முதிர்ந்த மற்றும் உடல்நலம் குன்றிய யானைகளை வனத்துறையிடம் ஒப்படைத்து அவற்றை அரசு செலவிலேயே பராமரிப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications