தேமுதிக கோஷ்டி மோதல்-நிர்வாகிகளுக்கு அடி, உதை

Subscribe to Oneindia Tamil


அறந்தாங்கி:

அறந்தாங்கி தேமுதிகவில் கோஷ்டி மோதல் ஏற்பட்டு மாவட்ட நிர்வாகிகளுக்கு அடி, உதை விழுந்தது.

அறந்தாங்கி ஆலங்குடியில் திருவரகுளம் ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இக் கூட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட தேமுதிக தலைவர் ஜாகீர் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் பேசிய முன்னாள் ஒன்றிய தலைவர் மன்மதன், கொத்தமங்களம் நகர செயலாளர் குமார், விடியல் குமார் ஆகியோர் முக்கிய பதவிகளை மாவட்ட நிர்வாகிகள் பணம் பெற்றுக் கொண்டு விற்று வருவதாக குற்றம் சாட்டினர்.

இதையடுத்து ஜாகீரின் ஆதரவாளர்கள் மன்மதன், குமார், விடியல் குமார் ஆகியோரை தாக்கினர். இதையடுத்து இரு தரப்பினரும் தங்களது ஆட்களை அங்கு குவித்தனர்.

இதைத் தொடர்ந்து இரு தரப்பும் பயங்கரமாக அடித்துக் கொண்டனர். நாற்காலிகள் பறந்தன, டேபிள்கள் உடைத்து நொறுக்கப்பட்டன.

கூட்டத்தில் இருந்த அனைவருக்கும் எந்த பாகுபாடும் இல்லாமல் சரமாரியாக அடி, உதை விழுந்தது. இதற்கு மகளிர் அணியினரும் தப்பவில்லை, மகளிர் அணியினர் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.

இதையடுத்து அவர்களாகவே டயர்ட் ஆகி சண்டையை நிறுத்திவிட்டு கலைந்து சென்றனர். எல்லாம் முடிந்தவுடன் அங்கு வந்த போலீஸார் இப்போது யாரும் இல்லாத ஹாலுக்கு பலத்த பாதுகாப்பு போட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+