பாட்ஷாவுக்கு தண்டனை தாமதமாகும்
கோவை:
கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள அல் உம்மா தலைவர் எஸ்.ஏ.பாட்ஷாவுக்கான தண்டனையை அறிவிப்பது தாமதமாகலாம் என்று தனி நீதிபதி உத்திராபதி கூறியுள்ளார்.
கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளகள் என அறிவிக்கப்பட்டவர்களுக்கு படிப்படியாக தண்டனை அறிவிக்கப்பட்டு வருகிறது.
இன்று 3 பேருக்கு தலா 7 ஆண்டு சிறைத் தண்டனை அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கு வேறு வழக்கில் ஆயுள் தண்டனை கிடைத்திருப்பதால் அவர்கள் விடுதலை ஆக மாட்டார்கள்.
இந்த நிலையில் முக்கியக் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ள அல் உம்மா தலைவர் பாட்ஷா, பொதுச் செயலாளர் அன்சாரி உள்ளிட்ட 70 பேருக்கு வருகிற 24ம் தேதி தண்டனை விவரம் வெளியிடப்படும் என நீதிபதி உத்திராபதி அறிவித்திருந்தார்.
ஆனால் தண்டனை விவரத்தை வெளியிடுவதில் தாமதம் ஏற்படக் கூடும் எனத் தெரிகிறது.
கோவையில் கடந்த சில நாட்களாக அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் தீர்ப்பு தயாரிப்பதிலும், தீர்ப்பின் நகலை பிரிண்ட் அவுட் எடுப்பதிலும் தாமதம் ஏற்படுகிறது.
22ம் தேதிக்குள் இந்த பணிகள் முடிந்தால், 24ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும். இல்லாவிட்டால் தீர்ப்பு தாமதமாகும் என்று நீதிபதி உத்திராபதி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications