தீவிரவாத இயக்கங்களால் ஜெயலலிதாவுக்கு ஆபத்து - ஓ.பி
சென்னை:
தீவிரவாத இயக்கங்களால் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அக் கட்சியைச் சேர்ந்த மாஜி முதல்வரும் அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
தீவிரவாத இயக்கங்களால் ஜெயலலிதாவுக்கு உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பது மத்திய, மாநில அரசுகளுக்கு ஏற்கனவே தெரியும். அப்படி தெரிந்திருந்தும் அவருக்கு பாதுகாப்பு தருவதில் அக்கறை இல்லாத காரணத்தினால் தான் அவரது வீட்டுக்குள் ஊடுருவல் போன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன.
அரசியல் ரீதியாக ஜெயலலிதாவுடன் மோத முடியாமல், கொல்லைப் புற வழியாக இதுபோன்ற ஆட்களை அனுப்புகிறார்கள்.
எனவே, ஜெயலலிதாவுக்கு முழு பாதுகாப்பு தேவை என்று நாங்கள் பேச முயற்சித்த போது, பேரவைத் தலைவர் பிறகு பேசலாம் என்று சொன்னார். நாங்கள் பேசி முயற்சித்த போது சட்டப் பேரவைக் காவலர்களை கொண்டு எங்களை வெளியேற்றி விட்டார் என்றார்.