அனுமதியில்லாமல் 500 கிலோ வெடிமருந்து வைத்திருந்த 2 பேர் கைது
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகே முறையான அனுமதியில்லாமல் 500 கிலோகிராம் வெடிமருந்து வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் ஜெயங்கொண்டம் பகுதியில் நேற்று வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிந்தனர். அப்போது கும்பகோணம் அருகில் உள்ள திருவலன்சுளையைச் சேர்ந்த ராமராஜன் என்பவர் காரில் வந்து கொண்டிருந்தார்.
அவருடைய வாகனத்தை சோதனை செய்ததில் வெடிபொருள்கள் அனுமதியில்லாமல் எடுத்து வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசார் அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள மேலாண்குழி என்ற கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரிடமிருந்து வாங்கி வருவதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து போலீசார் மேலாண்குழியில் உள்ள மகாலிங்கத்தின் வீட்டில் சோதனை நடத்தி மேலும் வெடிபொருட்களை கைப்பற்றினர்.
இது தொடர்பாக ராமராஜன், மகாலிங்கம் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்












Click it and Unblock the Notifications