For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குழந்தையை குளத்தில் வீசி கொல்ல முயன்ற தாய்!

By Staff
Google Oneindia Tamil News


திருவாரூர்:

குழந்தையை குளத்தில் வீசி கொல்ல முயன்ற தாயை மக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஹரித்ரா நதி தெப்பக்குளம் உள்ளது. இந்த தெப்பக்குளம் அருகே 35 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் ஒரு குழந்தையுடன் அமர்ந்திருந்தார்.

அழுவதும் கண்களை துடைத்துக் கொள்வதுமாக இருந்துள்ளார்.
இந் நிலையில் தன்னிடம் இருந்த குழந்தையை அந்த தெப்பக்குளத்தில் வீசி விட்டு புறப்புட்டுள்ளார்.

இதைப் பார்த்தவர்கள் குளத்தில் குதித்து குழந்தையை காப்பாற்றி, அந்தப் பெண்ணை மடக்கி பிடித்தனர்.

பெண்ணிடம் அப்பகுதி மக்கள் விசாரித்தபோது, குழந்தைக்கு உடல் நலம் சரியில்லை. குழந்தையின் மருத்து செலவுக்கு என்னிடம் பணமும் இல்லை. மருத்துவத்திற்காக உதவி கேட்டு சென்றவர்கள் என்னை ஏமாற்றி விட்டனர்.

அதனால் தான் வாழப் பிடிக்காமல் நானும், எனது குழந்தையும் சாக முடிவெடுத்தோம். ஆனால் அதற்குள் சிக்கி கொண்டேன் என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

இதையடுத்து அப் பகுதி மக்களே நிதி திரட்டி அவரை சொந்த ஊரான பாண்டிச்சேரிக்கு அனுப்பி வைத்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X