நெல்லை, தூத்துக்குடியில் விடிய விடிய மழை
திருநெல்வேலி:
நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் விடிய விடிய தொடர்ந்து மழை பெய்தது. மணிமுத்தாறு அணைப் பகுதிகளில் அதிக பட்சமாக 108 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை அக்18ம் தேதியிலிருந்து 25ம் தேதிக்குள் துவங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஒரு வாரம் முன்னதாகவே வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று மதிய நிலவரப்படி அம்பாசமுத்திரம் 60மி.மீ, ஆய்க்குடி 6.2மி.மீ, நாங்குநேரி 32மி.மீ, பாளையங்கோட்டை 20.4மி.மீ, ராதாபுரம் 3மி.மீ, சங்கரன்கோவில் 9.4மி.மீ, செங்கோட்டை 25மி.மீ, சிவகிரியில் 6.2மி.மீ, தென்காசி 14.1மி.மீ, நெல்லையில் 15.2மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.
பாபநாசம் அணையின் நீர்மட்டம் 107.65 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 945 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 922 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. பாபநாசம் மேலணையில் 32மி.மீ மழையும், கீழணையில் 45மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.
சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 116.14 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 61.80 அடியாகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 503 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 20 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
சேர்வலாறு அணையில் 14மி.மீ மழையும், மணிமுத்தாறு அணையில் அதிகபட்சமாக 108.40 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. பிற அணைகளை பொறுத்தவரை கடனாநதியில் 5மி.மீ, அடவிநயினார் அணையில் 342மி.மீ, நம்பியாற்றில் 33மி.மீ, கொடுமுடியாறு அணையில் 10மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.
நெல்லை, தூத்துக்குடி வட்டாரங்களில் பருவமழை நன்றாக பெய்துள்ளதால் அப்பகுதி விவசாயிகள் அனைவரும் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.












Click it and Unblock the Notifications