வகுப்பறையில் தற்கொலை செய்து கொண்ட மாணவன்
கேரளா:
கேரள மாநிலம் கல்பெட்டா என்ற இடத்தில், 9வது படிக்கும் மாணவன் வகுப்பறையிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
கேரளா மாநிலம், கல்பெட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவன் ஷரோன்ஜித் (14). இவன் பனமரம் என்ற இடத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் 9வது வகுப்பு படித்து வருகிறான்.
இன்று காலை பள்ளிக்கு வந்த ஷரோன்ஜித் மாணவர்கள் எவரும் இல்லாத நேரம் பார்த்து தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
வகுப்பறைக்குள் வந்த மாணவர்கள், ஷரோன்ஜித் தூக்கில் தொங்கியதை பார்த்து பள்ளி ஆசிரியர்களிடம் கூறியுள்ளனர்.
பின்னர் போலீசார் வந்து மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஷரோன்ஜித்திடம் அவனது பெற்றோர் 50 ரூபாய் பணம் கொடுத்துள்ளனர். அதை அவன் முழுவதும் செலவழித்து விட்டான். இதற்காக திட்டியுள்ளனர். இதையடுத்து மாணவன் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications