பொள்ளாச்சி நா.மகாலிங்கத்திற்கு உலகப் பெரும் தமிழர் விருது
திருப்பூர்:
உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பாக வரும் 28ம் தேதி திருப்பூரில் நடக்கவுள்ள மாநாட்டில் தொழிலதிபர், கல்வியாளர், அருட்செல்வர் பொள்ளாச்சி நா.மகாலிங்கத்திற்கு உலகப் பெரும் தமிழர் விருது வழங்கப்படுவதாக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
உலகத் தமிழர் பேரமைப்பின் 5வது ஆண்டு நிறைவு விழா மற்றும் தமிழர் தொழில் வணிக சிறப்பு மாநாடு ஆகியவை வரும் 28ம் தேதி திருப்பூரில் உள்ள ஆர்.வி.குமாரசாமி திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டை வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.விசுவநாதன் தொடங்கி வைக்கிறார். உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தலைமை உரை நிகழ்த்துகிறார்.
இது தவிர தமிழ்நாடு வணிகர் சங்கத் தலைவர் த.வெள்ளையன், தமிழ்நாடு சுதேசி குளிர்பான உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பொடாரன் உட்பட பல தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
மாலையில் நடக்கவிருக்கும் உலக பெருந் தமிழர் விருது வழங்கும் விழாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக தலைவர் ஜி.கே.மணி, விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உட்பட பலர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
இந்த மாநாடு குறித்து பழ.நெடுமாறன் நிருபர்களிடம் கூறியதாவது,
உலகம் முழுவதும் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் வசித்து வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களுக்குள் ஒருங்கிணைப்பு ஏற்படுத்துவதே இந்த மாநாட்டின் தலையாய நோக்கம் ஆகும்.
ஒவ்வொரு நாட்டிலும் வாழக்கூடிய தமிழ் தொழில் வர்த்தகர்களுக்கு வெவ்வேறு வகையான பிரச்சனைகளைகள் உள்ளது. இது குறித்து விவாதித்து தீர நடவடிக்கை எடுப்பது பற்றி ஆராய்வதே இதன் நோக்கமாகும்.
வருடம் தோறும் உலக தமிழர் பேரமைப்பு மாநாட்டில் உலக பெரும் தமிழர் விருது வழங்கப்படும். இந்த ஆண்டு தமிழ்நாட்டை சேர்ந்த தொழில், கல்வி, தமிழ் தொண்டு ஆகியவற்றில் சாதனை புரிந்த அருட்செல்வர் பொள்ளாச்சி நா.மகாலிங்கத்திற்கு விருது வழங்கப்படுகிறது என்று அவர் கூறினார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications