கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைந்த நாள்!
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைந்த நாளை கொண்டாடும் வகையில் கன்னியாகுமரி நகரம் விழாக் கோலம் பூண்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தை முன்பு கேரளாவுடன் இணைப்பதா அல்லது தமிழகத்துடன் இணைப்பதா என பிரச்சனை ஏற்பட்டது. அப்போது பெரும்பான்மை மக்களின் ஆதரவுடன் கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைக்கப்பட்டது.
தாய் தமிழகத்துடன் இணைந்த நாளான நவம்பர் 1ம் தேதி அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் போன்றவைகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமைக் கருவூலம், கிளை கருவூலங்கள் அவசரப் பணியை கவனிக்கும் பொருட்டு செயல்படும் என அம்மாவட்ட கலெக்டர் ஷிரு அறிவித்துள்ளார்.
தாய் தமிழகத்துடன் இணைந்த நாளான நவம்பர் 1ம் தேதி அனைத்து அரசு அலுவலகங்கள் விடுமுறை விடப்படுவதால் அதற்கு பதில் நவம்பர் 17ம் தேதி வேலை நாளாக செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பான்மை மக்களின் ஆதரவுடன் கன்னியாகுமரி தாய் தமிழகத்துடன் இணைந்த நாளான நவம்பர் 1ம் தேதியில் தமிழ் அமைப்புகள் பல சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி விழாக் கோலம் காண தாயாராகிக் கொண்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications