தமிழகம் முழுவதும் கன மழை!!
சென்னை: வட கிழக்குப் பருவ மழையின் முன்னோட்டமாக தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.
வட கிழக்கு பருவ மனை ஓரிரு நாட்களில் தொடங்கும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் நேற்று அறிவித்திருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
நேற்று மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்த்தது.
குறிப்பாக மதுரை, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் பலத்த மழை கொட்டியது. மதுரையில் நேற்று மாலை முதல் பெய்த கன மழையால் நகரின் பல இடங்களில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியது.
விருதுநகரில் பெய்த கனத்த மழையால் புறவழிச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் பெய்த கனமழையால், திருப்பத்தூரில் 2 பேர் மின்னல் தாக்கி பலியானார்கள்.
தலைநகர் சென்னையில் நேற்று போலவே இன்றும் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. சாரல் மழை போல தூறல் போட்டு வருவதால் நகரே குளிர்ந்து போய்க் காணப்படுகிறது.
மழை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications